இராஜாங்கனை பிரதேசத்திற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடையவுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை வாக்களர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகின. வாக்காளர் அட்டைகளை விநியோகித்தல் தொடர்பான ஆலோசனைகள் உரிய தபால் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விசேட நிலைமையின் கீழ் இராஜாங்கனை பிரதேசத்திற்கு மாத்திரம் இன்றும் நாளையும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித் ரணசிங்க தெரிவித்துள்ளார்.