தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. 2ம் திகதி நள்ளிரவு 12 மணியின் பின் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிளும் கூட்டங்களை நடத்துதல், வீடு விடாக சென்று வாக்குகளை கேட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல், பிரசார பதாதைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்மைய அமைதி காலத்தில் சட்டத்திற்கு எதிராக செயற்படும் நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்ல்கள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 3ம் திகதி நோன்மதி தினத்தன்று பிரசாரங்களை நடத்துவது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது எனினும் குறித்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.