கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து மக்களின் குரல்களை செவிமடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர். மக்கள் கூட்டங்களுக்கு பதிலாக ஜனாதிபதி அறிமுகப்படுத்திய புதிய கொள்கையை பாராட்டுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் 2வது சுற்றில் கம்பஹா மாவட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்ட போது மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
வேட்பாளர் ஆனந்த ஹரிஸ்சந்தரவின் ஏற்பாட்;டில் கட்டான வலிசிங்க ஹரிஸ்சந்ர விளையாட்டு அரங்குகிற்கு அருகில் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். அப்போது ஜனாதிபதி அங்குள்ள மக்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளமையினால் டெக்ஸி சாரதிகள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பிலும் கண்டறியுமாறு ஜனாதிபதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு ஆலோசனை வழங்கினார்.
குப்பைகூளங்களை அகற்றுவது தொடர்பாக முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு முத்துராஜவெல பதப்படுத்தும் இடத்தை பாதுகாத்து தருமாறு மக்கள் ஜனாதிபதியிடம் வேண்டிக்கொண்டனர்.
வேட்பாளர் லக்ஷ்மன் குணவர்தன ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு கம்பஹா நகர சபையின் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி இந்நிகழ்விலும் இணைந்து கொண்டார்.
விக்ரமராச்சி ஆய்வுகூடத்தை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வர்த்தக வாணிப மற்றும் சேவைகள் முற்போக்கு ஊழியர் சங்கம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தன.
கூட்;டுறவு சட்டமூலத்தை மறுசீரமைத்தல் மற்றும் கூட்டுறவு ஆணைக்குழு சபைக்கு திறமைமிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டியதன் தேவை குறித்தும் அத்தனகல்ல கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.
வேட்பாளர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு அத்தனகல்ல வாரண ரஜமகா விஹாரைக்கு அருகில் இடம்பெற்றது. இங்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு இப்பிரதேச மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர். இந்திய தொழிலாளர்களை அழைத்துவருவதை மட்டுப்படுத்தி பாரம்பரிய தங்கம், வெள்ளி, கைத்தொழிலாளர்களுக்கு தங்க உற்பத்திக்கான வாய்ப்புக்களை வழங்குமாறு மக்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
வேட்பாளர் மிலான் ஜயதிலக்க ஏற்பாடு கிரிந்திவெல பொது மக்கள் வாகன தரிப்பிட வளாகத்தில் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். மாணவர்கள் சிலர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கிரிந்திவெலவியில் இருந்து பாதுகாப்பு சேவை கல்லூரிக்கு பயணிப்பதற்காக பாடசாலை பஸ் வண்டியொன்றை வழங்குவதாக ஜனாதிபதி இங்கு உறுதியளித்தார். மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையில் 25 வருடகாலம் சேவைப்புரிந்தவர்களின் நியமனத்தை உறுதிப்படுத்துமாறு விடுத்த வேண்டுகோள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
வேட்பாளர் பேனன் குணரட்ன பிரதேசத்தில் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்ப்pலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். அங்கு கூடியிருந்த மக்களுடனும் ஜனாதிபதி சினேகபூர்வமாக கலந்துரையாடினார். தொம்பேயின் அபிமாணம் கொண்ட புத்தகம் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.