அரலகங்வில பொலிஸ் பிரிவின் அருணபுர , அரலங்கவில வைத்தியசாலை வீதியில் குடா ஓயா பாலத்திற்கு அருகாமையில் ட்ரக் வண்டியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஒட்டுனர் உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஒட்டுனர் அரலகங்வில வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதை அடுத்தே உயிரிழந்தார். தவுல் தமண அரல கங்வில பகுதியை வசிப்பிடமாக கொண்ட 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.