சிலாம் ஸ்ரீ முன்னேஸ்வரம் கோவிலின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
வருடந்தோறும் இடம்பெறுகின்ற முன்னேஸ்வரம் கோவிலின் உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இம்முறை உற்சவத்தில் கலந்து கொள்வதற்கான சுகாதார வழிமுறைகள் பேணப்பட வேண்டுமென அதன் பிரதம குருக்கள் தெரிவித்துள்ளார்.