பொது சுகாதார பரிசோதகர்களின் தொழில் ரீதியிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.
இதற்கமைய குறித்த தரப்பினர்களின் பிரதிநிதிகள் அலரி மாளிகைக்கு இன்றுமுற்பகல் அழைக்கப்பட்டனர். பொது சுகாதார பரிசோதகர்களின் சங்க பிரதிநிதிகள் அரச வைத்திய அதிகாரிகளின் சங்க பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்கவும் பேச்சுவார்த்தைக்காக வருகை தந்தனர். பொது சுகாதாரகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலான பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்று வருகின்றது. பேச்சுவார்த்தையைதொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.