கொவிட் 19 அவசர நிலை தொடர்பில் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அது தொடர்பான பிரதான கூட்டம் ஒன்றும் இவ்வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேரழிவாக கொவிட் 19 பிரகடணப்படுத்தப்பட்டு 6 மாதங்களுக்கு பின்னரே, மீளாய்வுக்கென சுகாதார அதிகாரிகள் கூட்டம் இடம்பெறவுள்ளது. தொற்று நோயினால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைப்பின் செயற்பாடுகள் அமெரிக்காவின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. எவ்வாறெனினும் குறித்த விமர்சனங்களை நிராகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
213 நாடுகள் மற்றும் சுயாட்சி பிரதேசங்களில் கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதேவேளை கொவிட 19 தொற்றானது உலக சுகாதார அமைப்பினால் சர்வதேச ரீதியாக அறிவிக்கப்பட்ட மிக கடுமையான சுகாதார அவசரக்காலநிலையென உலக சுகாதார அமைப்பின் தரைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.