கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. 11ம், 12ம் மற்றும் 13ம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. காலை 7.30 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
ஏனைய வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10ம் திகதி முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும். மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியமாகும். அதற்கமையவே கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாடசாலை நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.