நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மட்டகளப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் , மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்
படிக்க 1 நிமிடங்கள்