வெள்ளவத்தை மயுரா குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 25 வயதான இந்திய பிரஜையே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மின்னேறிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போத்தலகர பகுதியிலும், வெளிக்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுகல பிரதேசத்திலும் 58 மற்றும் 49 வயதான இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதேவேளை வெலிக்கடை பகுதியில் 25 வயதான இளைஞர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனிடையே கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். வீதியில் தரித்து நின்ற பாரவூர்தியுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.