நாட்டின் ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வேலைத்திட்டத்தினூடாக டெங்கு நுளம்பு பரவும் வகையில் காணப்படும் இடங்கள் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.