40 மெற்றிக் டொன் நெல்லை இதுவரை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளதான நெற் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. அதிகூடிய நெல் விளைச்சல் அம்பாரை மாவட்டத்திலிருந்து கிடைத்துள்ளதாக அதன் தலைவர் கலாநிதி ஜடால் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
“நெற்சந்தைப்படுத்தல் அதிகார சபையின் ஊடாக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 40 தொன்கள் வரை நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அம்பாரை மாவட்டத்தில் இருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது. குருநாகல் மட்டக்களப்பு முல்லைதீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த பெரும்போகத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை போன்றே தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றது. உலர வைத்த நெல் ஒரு கிலோ நெல் ஐம்பது ரூபா என்ற அடிப்படையில் நெற்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்படுகின்றது. ஈர தன்மையுடன் காணப்படும் நெல் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஊடாக 44 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. அதேபோன்று ஒவ்வொரு பிரதேசங்களிலும் நெற்கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுத்து நெற்சந்தைப்படுத்தும் அதிகார சபையின் களஞ்சியசாலைகளுக்கு கையளிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. இவற்றில் எவ்வித மாற்றங்களும் இல்லை. கடந்த வருடத்தில் கொள்வனவு செய்யப்பட்ட விலைக்கே கொள்வனவு செய்யப்படுகின்றது.விசேடமாக உர மானியத்தை பெற்று கொண்டு ஒரு ஹெக்டயாருக்கும் கூடுதலாக நெற் செய்கையை மேற்கொண்ட விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்சம் ஆயிரம் கி.கி நெல்லை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.”