ஐபிஎல் கிரிக்கட் போட்டிகள் ஐக்கிய அரபு எமீர் ராஜ்ஜியத்தில் நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் மாதம் 26ம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 7ம் திகதி வரை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடத்தப்படும் ஐபில் கிரிக்கட் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை கால வரையரை இன்றி ஒத்தவைக்கப்பட்டது.
தற்போது ஐக்கிய அமீர் ராஜ்ஜியத்தில் கொரோனா தொற்று ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய போட்டியை அந்நாட்டில் நடத்த எமீர் ராஜ்ஜிய அரசாங்கமும் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு எமீர் ராஜ்ஜியத்தில் நடத்துவது தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அனுமதிக்கென விண்ணப்பித்துள்ளதாக ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.