மலேசியாவிற்கு வருகை தருவோர் நாளை முதல் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொவிட் 19 தொற்றாள் சர்வதேச நாடுகள் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் மலேசிய அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளை முதல் மலேசியாவிற்கு வருகை தருவோர் அரசாங்கத்தால் நியமிக்கப்ட்ட சிறப்பு மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அவர்கள் தமக்கான தங்குமிட செலவுகளை முழுஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை கண்காணிப்பதற்கு என விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.