கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 8 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவிசிய திருத்த பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய பத்தரமுல்ல, கொஸ்வத்த, தலாஹேன, மாலபே, ஜயவடனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை யான காலப்பகுதி நீர் விநியோக தடை அமுலில் இருக்கும். பொதுமக்கள் நீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.