பொது தேர்தல் தொடர்பான மற்றுமொரு பேச்சுவாரத்தை தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது. கொவிட் 19 நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தும் விதம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் வாக்களிப்பதற்கு வேறு ஒரு தினத்தை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தேர்தல் வன்முறை செயற்பாட்டு கண்காணிப்பு மத்திய நிலைத்தின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார். அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஒன்று கூடி கலந்துரையாடிய பின்னர் தீர்மானிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.