கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த கடற்படை வீரர்களில் மேலும் இருவர் குணமடைந்துள்ளனர். இதுவரை 903 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று கடற்படை வீரர்கள் மாத்திரமே சிகிச்சைப்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்து 704 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களில் இரண்டாயிரத்து 23 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்னும் 670 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.