புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் பல தடவைகள் அரசியலமைப்பு திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் திருத்தங்கள் மேற்கொள்வதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விரும்பவில்லை. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவே பொதுஜன பெரமுன கட்சி முயற்சிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான ஆணையை தர வேண்டும். இதற்காக மக்கள் பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.