தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 219 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபிளவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
கடந்த 2 ம் திகதி தென்கொரியாவிலிருந்து நாட்டிற்கு வருகைதந்தவர்கள் குறித்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டது.
இதற்கமைய அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிமைப்படுத்தலை நிறைவு செய்த குறித்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களில் கர்;ப்பிணி தாய் ஒருவரும், 6 பெண்களும் 3 சிறுவர்களும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.