நகர மற்றும் கிராமிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நிர்மாண துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டு பொறியியலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குடிப்பதற்கோ பயிர்ச்செய்கைகளை மேற்கொளட்வதற்கோ நீர் பற்றாக்குறையினால் பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன். குளங்கள் மற்றும் நீர்பாசன தொகுதிகளின் செயற்பாடுகளும் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார். பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க முடியாது விட்டால் அபிவிருத்தி திட்டங்களினால் எவ்வித பயனும் இல்லையன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இப்பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி பயங்கரவாத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் போது இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததாக சுட்டிக்காட்டினார். நிர்மான துறையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள புரட்சியின் போது உள்நாட்டு பொறியியலாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தம்மீது ஜனாதிபதி வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் உள்நாட்டு பொறிமுறைக்குள் நாட்டை கட்டியெழுப்பும் பணிக்கு தோள்கொடுப்பதாக பொறியியலாளர்கள் இதன் போது உறுதி அளித்தனர். அடிப்படை மாதிரிகளுக்க எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு குளங்கள் மற்றும் நீர்பாசன தொகுதிகளை புனரமைப்பதன் முக்கியத்துவம் குpறத்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி நாட்டை சரியான பாதையில் இட்டுச்செல்வார் என்ற தீவிர நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் பொறியியலாளர்கள் இதன் போது தெரிவித்தனர்.