பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் போதைப்பொருள் வர்த்தகத்தோடு தொடர்பு வைத்திருந்த அதிகாரிகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய குறித்த அதிகாரிகள் சிலரின் வீடுகள் அரச இரசாயன பகுப்பாய்வாளர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்ற சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர்களான நாகொடிக் அதிகாரிகளினால் அரசி மூடைகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.