பரீட்சைகள் திணைக்களம் பெறுபேற்று சான்றிதழை வெளியிடுவதற்காக முன்னெடுக்கும் ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை நடவடிக்கைகள் இன்று முதல் மீள் அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சகாதார பிரச்சினைகள் காரணமாக இந்நடவடிக்கை நிறுத்தப்படுகின்றது. எனினும் ஒன்லைன் மற்றும் மின்னஞ்சல் ஊடாக பெறுபேற்று சான்றிதழை பெற்றுகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்திளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ 1911 என்ற தூரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாகவோ மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பித்து 48 மணிநேரத்திற்குள் குறித்த சான்றிதழை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.