கடந்த 5 ஆண்டுகளாக தாதமப்படுத்தப்பட்டிருந்த ருஹூனுபுர நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகளை உடன் ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளை பணித்துள்ளார்.
”2014ம் ஆண்டு இரண்டாம் கட்ட நிர்மாண பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அது கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி திட்டங்களுக்கும் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படாமையினால் பல பிரதேச செயலக பிரிவு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இந்த நீர்சுத்திகரிப்பு நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டது. தென்கொரிய கடன் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ருஹூனுபுர நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்டத்திற்கு 8848 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. அத்துடன் அரசாங்கம் 1500 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. 2 கட்டங்களாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. திட்டத்தின் முதல் கட்டம் செயற்றிறன் மிக்கதாக முன்னெடுக்க இரண்டாம் கட்ட பணிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதே பொறியியலாளர்களின் எதிர்பார்ப்பாகும். இதன் அடிப்படையில் 2ம் கட்டத்தை துரிதமாக ஆரம்பிக்குமாறு பிரதமர் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.”