வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகளுக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்பை பேணியவர்ள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.