கடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை பேருவல – மக்கொன கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த சகோதரிகள் மூவர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டார். ஏனைய இருவர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய இன்று காலை குறித்த இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.