கடற்படை தளபதி வயிஸ் எட்மிரல் பியல் டி சில்வா எட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் குறித்த பதவி உயர்வ அமுலாகின்றது. இதேவேளை, கடற்படை தளபதி எட்மிரல் பியல் டி சில்வா நாளை ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்றைய தினம் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு பாதுகாப்பு அமைச்சியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், வலுவான தலைமைத்துவத்தின் கீழ் கடற்பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை எட்மிரல் பியல் டி சில்வா சிறப்பாக முறியடித்ததாக குறிப்பிட்டார். கடந்த 2019 ஜனவரி மாதம் முதலாம் திகதி கடற்படையின் 23வது தளபதியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.