பொலிஸ் அதிகாரிகள் மூவரை மோதிவிட்டு தப்பிச்சென்ற டிப்பர் ரக வாகன சாரதியை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹக்மன கோங்கல பகுதியில் பொலிஸ் வீதித் தடை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை குறித்த வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு அதிகாரிகள் காயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/z9zBkM4tpHc”]