போதைப்பொருள் மற்றும் கப்பம் பெறும் குழுக்கள் உள்ளிட்ட சகல பாதாள செயற்பாடுகளையும் சமூகத்திலிருந்து ஒழிக்கவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சகலருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.