இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 4 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராஜாங்கனை பகுதியை சேர்ந்தவர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் 57 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கந்தகாடு புனர்வாழ்வு மத்தியநிலையத்தில் 13 பேரும் அவர்களோடு தொடர்புகளை பேணிய 30 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை ஆயிரத்து 980 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.