உயர்தரப்பரீட்சையை எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் நடத்துமாறு ஒரு சில மாணவர்கள் விடுத்த கோரிக்கை கல்வியமைச்சரிடம் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி – அலபலாவில பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அதனையடுத்து, ஜனாதிபதி நாவலப்பிடியவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு மக்கள் சந்திப்புகளில் பங்கேற்றார்.
உயர்கல்வி நிறுவனம் மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரி ஒன்றை நவலப்பிடியவில் அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி நவலபிடி பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டார். இதன்போது தேயிலை தொழிற்துறையினர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி பதில் வழங்கினார். தேசிய விவசாயிகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது அவர்களிடம் குறிப்பிட்டார்.