நாட்டை கட்டியெழுப்ப கூடிய 2 கட்சிகள் மாத்திரமே காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் கொலன்னாவையில் ஏற்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
(இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வரம் ஒன்றை கோருகின்றது. பொது மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தி எமது பொருளாதாரத்திற்கு புத்தூயிரளிக்கவே வரம் கேட்கின்றோம். அதற்கு பாராளுமன்றத்தில் 3 இல் 2 பெரும்பான்மை தேவைப்படுகின்றது. நாட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகள் காணப்படுகின்றன. இது கொரோனா தொற்றினால் ஏற்பட்டதல்ல. கொரோனாவினால் இது மேலும் உக்கிரமடைந்தது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியில் இருந்தாலும் ஒரேகுடும்பத்திலிருந்து வந்த போதும் பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.)