12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதியினை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை அரசாங்கம் பகலுணவு வழங்கிய பாடசாலைகளுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமதாக கடந்த காலங்களில் பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. அ
தற்கமைவாகவே குறித்த உலர் உணவு பொதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்தார். ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த உலர் உணவுப்பொதிகள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.