பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களை 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் போதை வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போதை வர்த்தகர்களுக்கு உதவி செய்தமை, கைப்பற்றப்படும் போதைப்பொருளை மீள விற்பனை செய்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.