வடக்கு கிழக்கு ஆசியாவில் ருபெல்லா மற்றும் அம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை பெயரிட்டுள்ளது. எதிர்வரும் 3 வருடங்களுக்குள் ருபெல்லா அல்லது அம்மை நோயாளர் ஒருவரேனும் இனம்காணப்படாவிட்டால், குறித்த நோய்களை ஒழித்த நாடுகளாக இலங்கையும் மாலைதீவும் பிரகடனப்படுத்தப்படும். இலங்கையில் இறுதியாக 2016 ம் ஆண்டு அம்மை நோயாளர் ஒருவர் பதிவாகியிருந்தார். 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் ருபெல்லா நோயாளர் ஒருவர் பதிவானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.