ஸ்ரீ லங்கன் அப்பிள் என பிரபல்யம் பெற்ற நுவரெலிய பகுதியில் செய்கை பண்ணப்பட்ட பெயாஸ் இனம் சந்தைக்கு விடப்பட்டதையடுத்து அதற்கான கேள்வி அதிகரித்துள்ளது.
பிரபல பண்ணையாளரான சாமுவேல் பிரக்கரினால் பெயாஸ் செய்கை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. ஹக்கல, டொப்பாஸ், கந்தபொல மற்றும் ராகல ஆகிய பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் பெயாஸ் செய்கை வெற்றிகரமாக இடம்பெறுகின்றது. 1978 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தை பெரிதும் பாதிப்புக்குட்படுத்திய பலத்த காற்று நுவரெலிய பெயாஸ் செய்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பலத்த காற்றையடுத்து பயிர்ச் செய்கைகளுக்கு நோய்தாக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கந்தபொல டொப்பாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில்முன்னெடுக்கப்பட்ட பெயாஸ் செய்கை முற்றுமுழுதாக அழிவடைந்தது, ராகலயை அண்மித்த பகுதிகளில் மாத்திரம் பெயாஸ் செய்கை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இதன் மூலம் பெறப்பட்ட சிறந்த அறுவடையை தொடர்ந்து ராகல பெயாஸ் எனபிரபல்யம் பெற்றது. ராகல மந்ரிதென்ன, கோணகல, ரத்னாயக்கபத்தன, பல்லப்பத்தன, பிங்கங்தலாவ உள்ளிட்ட பகுதிகளில் இன்று பெயாஸ் செய்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/2nQCj5BE5aw”]