பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சோனாரோ கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவருக்கு வைத்திய பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிக்கப்பட்டதால் அதிக பாதிப்புக்கள் இல்லையென பிரேசில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேசம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தும் வரும் நிலையில், பிரேசில் ஜனாதிபதி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி தேவையில்லை எனவும் சுதந்திரமாக நடமாடுங்கள் எனவும் அறிவித்து வந்தார். கொரோனா பாதிப்பை விட பொருளாதார வீழ்ச்சி மோசமானது எனவும் மக்கள் சுதந்திரமாக பொருளாதா நடவடிக்கையில் ஈடுப்படுமாறும் அவர், குறிப்பிட்டு வந்தார். எனினும் அவரது நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பிரேஸிலில் 16 இலட்சத்து 74 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் பிடிக்கப்பட்ட நிலையில், 66 ஆயிரத்து 868 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 48 ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.