கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஈரானில் ஒரே நாளில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 931 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 637 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதுவரை ஈரானில் 2 இலட்சத்து 45 ஆயிரத்து 688 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனனர். ஈரானில் 31 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மாத்திரம் 20 வீதமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றாமை காரணமாக மீண்டும் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.