கொரோனா காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்ட காலத்தில் ஆசன முற்பதிவு செய்து ரயிலில் பயணிக்காத பயணிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 20 ம் திகதி முதல் ஏப்ரல் 20 ம் திகதி வரையான காலப்பகுதி வரை ரயில் அனுமதிப்பத்திரம் வைத்துள்ள அல்லது பணம் செலுத்தி ஆசனம் ஓதுக்கிய பயணிகளுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பணம் அறவிடாமல் புதிய நுளைவுச்சீட்டு அல்லது அனுமதி சீட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் திகதி முதல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.