கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 14 பேர் பூரண குணமடைந்துள்ளனர். அதற்கமைய இதுவரை ஆயிரத்து 917 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 76 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 38 பேர் விசேட கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.