Update : சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை
எம்.கே.சிவாஜிலிங்கம் கைது..!
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் வல்வெட்டித்துறை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டு இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகவில்லையென குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே அவரை கைதுசெய்யுமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.