எவராலும் பறித்துக்கொள்ள முடியாத வாக்குரிமையை புறக்கணிக்க வேண்டாமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைவரும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதேபோல் எந்தவொரு பேதமும் இன்றி அனைவக்கும் காணப்படும் உரிமையாக இருக்கும் வாக்குரிமையை விட்டுக்கொடுக்க வேண்டாமென அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை புறக்கணிப்பது நம்மை நாமே புறக்கணிப்பதற்கு சமமமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் போது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாக நாட்டில் மீண்டும் நோய்த் தொற்று பரவுவதை தடுத்து சிறந்த முறையில் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.