கணினி, கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி திரைகளை அதிகம் பயன்படுத்துவதால், கடுமையான கண் பிரச்சினைகள் ஏற்படுமென வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொவிட் 19 பரவல் காரணமாக ஊரடங்கு விதிகள் அமுலிலுள்ளன. இக்காலப்பகுதியில் கணினி, கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பாவனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண் சுகாதாரம் குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 20 அடி தூரத்திலுள்ள இடத்தை, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை , 20 நொடிகள் பார்த்தல், வழக்கமான வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்தல், ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி என்பன கண் பிரச்னைகளிலிருந்து பாதுகாப்புபெற உதவுமென வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.