கொரோனா நிதியத்துக்கு கிடைத்த வெளிநாட்டு உதவிகளுக்கு என்ன நடந்தது என ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். சிறிகொத்த ஐதேக தலைமையகத்தில் இடம்பெற்ற தொலைதொடர்பு செயலணியுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
(கொரோனா 2ஆம் கட்டம் தலைதூக்கியுளளது. பணம் இல்லை என்று கூற வேண்டாம். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் பின்னர் நான் இங்கு கூறினேன். எமக்க 230 மில்லியன் டொலர் கிடைத்ததாக கூறினேன். பணம் இருப்பது உலக சுகாதார ஸ்தாபனத்தில் அல்ல. இதுவரை 200 மில்லியன் டொலர் கிடைத்திருப்பதாக அறிகின்றேன். இந்த பணத்திற்கு என்ன நடந்தது என நான் கேட்கிறேன். எவ்வளவு கிடைத்தது. ஆகஸ்ட் மாதம் இந்த அரசாங்கத்தை ஒதுக்கிவிட்டு ஐதேக அரசாங்கம் ஒன்றை அமைப்போம். கொரோனாவை கட்டுப்புடுத்தும் முறை ஒன்றை நாம் உருவாக்குவோம். )
ரணில் விக்கிரமசிங்கவின் இக்குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பெல்மடுல்லையில் இன்று இடம்பெற்ற பொது கூட்டத்தில் பதில் அளித்தார்.
(கொவிட் 19 2ஆம் கட்டம் உருவாவதனால் ரணில் விக்ரமசிங்க அதனை கட்டுப்படுத்துவதற்கு அவர்களுக்க அதிகாரத்தை வழங்குமாறு கூறுகின்றார். ஈஸ்டர் தாக்கதல் தொடர்பாக இடம்பெறும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சென்று அங்ககு இருக்கும் ஒரு கதிரையில் அமர்ந்து சாட்சியம் அளிக்கும் விதத்தை நன்றாக பார்க்குமாறு நான் கேட்டு கொள்கின்றேன. அவர்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்தோம் என்பது அவர்களுக்கு புரியும். )
இதேநேரம் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இது தொடர்பாக தெளிவாக விளக்கமளித்தார்.
(கொவிட் 19 காலத்தில் உலகில் பல நாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆசிய அபிவிருத்தி வங்கி உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற பல நிறுவனங்கள் மற்றும் நாடுகளில் இருந்து 173.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன. 75.0 உதவிகளும் 4.2 மில்லியன் டொலர் பொருட்களும் கிடைத்துள்ளன. மொத்த தொகை 252 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த பணம் டொலர்களாக எமது நாட்டுக்கு இதுவரை கிடைக்கபெறவில்லை. சில அதற்கான சேவைகளை பெற்ற கொண்டதன் பின்னரே கிடைக்கின்றன. பொருட்களை பெற்று கொண்டதன் பின்னர் சிலவற்றை சமர்பித்ததன் பின்னரே அந்த பணம் கிடைக்கின்றன. )