கொழும்பு துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை தொடர்பாக துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையே பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் பொருத்துவதற்கு சீனாவில் இருந்து எடுத்துவரப்பட்ட பாரந்தூக்கிகளை அங்கு பொருத்துமாறு கோரி துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் மூவர் நேற்று ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். 187 அடி உயரமான பாரந்தூக்கியின் மேல் ஏறி இவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து துறைமுக ஊழியர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தகாரர்களுக்கும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.