தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த 59 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 37 பேர் இதில் உள்ளடங்குகின்றனர். முப்படையினரால் நடத்தி செல்லப்படும் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 17 ஆயிரத்து 575 பேர் இதுவரை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் 50 மத்திய நிலையங்களில் 6 ஆயிரத்து 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.