த பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு நட்டயீடு வழங்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள மக்கள் வங்கியின் 63 கிளைகளின் ஊடாக இதுதொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. ஒரு இலட்சத்து 40 ஆயிரம் வைப்பாளர்களில் 6 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த தொகையை வைப்பிலிட்டுள்ளவர்களுக்கே குறித்த நட்டயீடு வழங்கப்படவுள்ளது. அதற்கமைய 38 ஆயிரம் பேருக்கு நட்டயீடு வழங்கப்படுமென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. த பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு காப்பீட்டு நட்டயீட்டு தொகையை வழங்கும் முதற்கட்டம் கடந்த 7 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. தனிநபர் கணக்கு தவிர்ந்த ஏனைய எந்தவொரு கணக்கும் அற்ற ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வைப்பாளர்களுக்கு நட்டயீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.