மின் கட்டண பட்டியலுக்கு நிவாரணம் வழங்கும் யோசனைகளை முன்வைப்பதற்கென நால்வர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் யோசனைகளை எதிர்வரும் திங்கட் கிழமை அளவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வரும் அமைச்சரவை கூட்டத்தில் குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் , ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மின்கட்டண பட்டிலுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.