கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலின் குண்டுதாரியான மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் அல்லது அப்துல்லா எனும் சந்தேகநபருக்கு துணை நின்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த மொஹமட் அர்ஷாட் எனும் சந்தேகநபர் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக கண்காணித்ததன் பின்னர் கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
இதேநேரம் நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் சில சாட்சியாளர்கள் வழங்கிய இரகசிய வாக்குமூலங்கள் ஊடகங்களுக்கு வெளியானமை தொடர்பாக முறையான விசாரணையொன்றை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு கோட்டை நீதவான் மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரை பணித்துள்ளார்.