நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கும் திட்டங்களை அமுல்படுத்தும் போது வடக்கு தெற்கு என்றபாகுபாடு இன்றி முன்னெடுக்கப்படுமென பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகவியலாளர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
2005, 2010 தமது அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டினால் அம்மாகாணங்களில் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
(1977 களுக்கு பின்னர் வடகிழக்கிற்கு பாரிய அபிவிருத்திகளை பெற்றுக் கொடுத்த அரசாங்கம்எமது அரசாங்கம். கடந்த 5 வருடங்களில் பின்நோக்கிச் சென்றதை விட முன்னோக்கிச் செல்லவில்லை. கடந்த 5 வருடகால ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தில் அவ்வாறு எனில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருந்த ரிஎன்ஏ அரசாங்கத்தினால் எவ்வாறான அபிவிருத்திகள் வட மாகாண மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டன. அரசியல் ரீதியில் பிரச்சினைகளை முன்வைத்ததை தவிர பொது மக்களின்வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. குடிநீரை வழங்கவோ, வீதியை அமைக்கவோ, அவர்களால் முடியவில்லை. இவர்களை கொண்டு எவ்வித பணிகளையும் முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லையென்பதே எனது கருத்தாகும். வடக்கிலும் தெற்கிலும் அபிவிருத்தி பணிகளை சமமான மட்டத்தில் முன்னெடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும். யுத்தம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தெற்கை போன்று வடக்கையும் கொண்டு வருவதேற்கே அபிவிருத்தி திட்டங்களுக்குமுன்னுரிமை வழங்கினோம். அது பாரியளவில் வெற்றியளித்ததாக நான் நம்புகின்றேன். ஆனால் கடந்த காலத்தில் அது பின்நோக்கிச் சென்றது. )