மின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம் தொடர்பில் இறுதி தீர்வு அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மின்பட்டியல்கள் உரிய முறையில் கிடைக்கப்பெறாமை மற்றும் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை போன்ற முறைப்பாடுகளை மக்கள் முன்வைத்துள்ளனர். எனினும் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் அலகுகளுக்கு அமைய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் மின்பட்டியல் கட்டணங்கள் நியாயமான முறையில் இல்லையென பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த பிரச்சினை தொடர்பில் அமைச்சரவைக்கு விளக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மின் பட்டியல் கட்டணங்களின் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மின்சார சபை ஈட்டமுடியுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜுன் மாதத்திற்கான மின் கட்டணங்களில் நூற்றுக்கு 90 வீதமானவை பாவனையாளர்களால் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.